வெள்ளி, 11 அக்டோபர், 2013

அயலவர் இலக்கணப் பங்கு

காலம் கடந்து வாழும் நம் தமிழ் மொழி இலக்கனத்திற்கெனத் தனி வரலாறு கொண்டுள்ளது. தொல்காப்பியம் தொடங்கி அதன் வளர்ச்சியாக வீரசோழியம், நன்னூல், நேமிநாதம், தண்டி, புறப்பொருள் வெண்பா மாலை எனத் தமிழன்னை தன் இலக்கணப் பரப்பை விரிக்கின்றாள்.
அயல்நாட்டினர் தமிழைக் கற்றதுடன் படைக்கவும் செய்தனர். அவ்வகையில், இலக்கணப் படைப்புகள் மேலும் பெருகின.
ஈழத்தவர் பங்கு இதில் சிறப்பாக உள்ளது. இலக்கண நூலாசிரியர்கலாகவும், உரையாசிரியர்களாகவும் பதிப்பாசிரியர்களாகவும் விளங்கினர். ஆறுமுகநாவலர் அவர்கள் இலக்கண வினாவிடை, இலக்கன்ச்சுருக்கம் படைத்தார். நன்னூலுக்குக் காண்டிகை உரை எழுதினார். பல இலக்கண நூல்களைப் பதிப்பித்தார்.
தமிழ் பேசுவோர் அல்லாத அயலவரும் தமிழுக்கு இலக்கணம் வகுத்தனர். வீரமாமுனிவரின் தொன்னூல் விளக்கம் சிறப்பாக இதில் கால் பதித்தது என்றால் அது மிகை இல்லை. 
>